செய்திகள் :

வைகோ நன்றி மறக்கக்கூடாது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

post image

வைகோ நன்றி மறக்கக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், வெள்ளையின் ஆதிக்கத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் அழகுமுத்துக்கோன், மார்பை பிளந்த போதும் அவர் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு முறையாக இல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் லாக்அப் மரணங்கள் என அதிகரித்து வருகிறன.

இன்றைக்கு இந்த சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு கூட சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என விமர்சித்தார். வைகோ நன்றி மறப்பது நல்லது அல்ல, திமுகவில் இருந்து அவர் பிரிந்து வந்த போது அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது அதிமுகதான், ஜெயலலிதாவால்தான் அங்கீகாரம் கிடைத்தது என்பது அவர்களுக்கே தெரியும்.

நவீன் பொலின்மேனி தற்கொலை: குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது நடவடிக்கை!

கொஞ்சம் கூட வாய் கூசாமல் மறைந்த தலைவரை இழிவுபடுத்தி பேசுவது அண்ணன் அவர்களுக்கு நல்லதல்ல, திமுகவில் இருந்து மதிமுக பிரிந்த போது என்னென்ன விமர்சனங்கள் வைத்தார் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.

அழகுமுத்துக்கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டது தொடர்பான கேள்விக்கு அதிமுக, தவெக கொடி பறக்கக் கூடாதா, தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Former AIADMK minister Jayakumar has said that Vaiko should not forgot gratitude.

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்ப... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெ... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!

தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்க... மேலும் பார்க்க

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க