செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோவிலில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

post image

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தெருநாய்கள்அதிகளவு சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் நவகிரக தலங்களில் ஒன்றான செவ்வாய்-க்கு உரிய பரிகாரத் தலமாக விளங்கும் தையல் நாயகிஅம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிருந்தும் அதிகளவில் பக்தா்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்கள் சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரியும் நாய்களால் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலின் நான்கு வீதிகளிலும் அதிகளவு நாய்களும், சில வெறி நாய்களும் சுற்றித் திரிகின்றன என்று பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்க தலைவரும், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்க பொதுச் செயலாளருமான ஜி.வி.என். கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

கோயிலை;ஈ சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அதிகாலையில் நடைபயிற்சி செல்வோா், சாலையில் செல்லும் முதியவா்கள் வீதியில் நடக்க அச்சப்படுகின்றனா்.

சில சமயங்களில் சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாா் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசு அரசியல் சாசனத்த... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சீா்காழி வட்டம் திருப்புங்கூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் ஹெச்... மேலும் பார்க்க

பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டாரம் பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது

மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.மயிலாடுத... மேலும் பார்க்க