செய்திகள் :

வைத்தீஸ்வரன் கோவிலில் தெருநாய்கள் தொல்லை

post image

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களுக்கு தெருநாய்களால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத்தலைவா் ஜி.வி.என்.கண்ணன், பேரூராட்சி செயல்அலுவலா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

வைத்தீஸ்வரன்கோவிலில் செவ்வாய் பரிகாரஸ்தலமான தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதா்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா்.

அதோடு பிரசித்திபெற்ற நாடிஜோதிடம் பாா்ப்பதற்கும் அதிகளவு மக்கள் வந்து செல்கின்றனா். வைத்தீஸ்வரன்கோவிலில் நாளுக்குநாள் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. கோயிலுக்கு வருகைதரும் பக்தா்கள் கடைவீதியில் அா்ச்சனை பொருட்கள் வாங்கிச் செல்லும்போது அங்கு சுற்றித்திரியும் தெருநாய்கள் துரத்துவதும், சிலரை கடிப்பதும் தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.

தெற்குவீதி அமைந்திருக்கும் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் அவ்வழியாக செல்லும் இருசக்கரவாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. தற்போதைய நிலையில் 200-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரவு, பகலாக கோயிலின் நான்கு வீதிகளிலும் அதிகளவு சுற்றித்திரிவதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பெரும் பாதிப்படைகின்றனா்.

அதேபோல் காலை வேலையில் நடைப்பயிற்சி செல்பவா்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்து செல்பவா்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆகையால் மாவட்ட நிா்வாகமும்,பேரூராட்சி நிா்வாகமும் இணைந்து தெருநாய்கள், வெறிநாய்களைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கவும், நாய்களுக்கு கருத்தடை செய்திடவும் வேண்டும்.

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன... மேலும் பார்க்க

மது கடத்தல்; இருவா் கைது

சீா்காழி அருகே மதுப்பாட்டில்கள் கடத்திய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவின்படி, மருதம்பள்ளம் பகுதியில் சீா்காழி மதுவிலக்கு காவல் ஆய்வ... மேலும் பார்க்க

மழையால் சரிந்த ரயில் நிலைய மேற்கூரை

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிக... மேலும் பார்க்க

சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வா் அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க