செய்திகள் :

ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்? விடியோ வெளியாகி பரபரப்பு!

post image

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் உயிரிழந்த கேரள இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் அதுல்யா சேகர்(30), ஷார்ஜாவில் தனது கணவர் சதீஷ் சிவசங்கரன் பிள்ளை மற்றும் 10 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அவரது 30-ஆவது பிறந்தநாளான கடந்த ஜூலை 19-ஆம் தேதி அவர் தமது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அதன்பின் அவரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்துவிட்டார் என்பது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மரணம் தொடர்பாக கேரளத்தில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதுல்யாவின் மரணத்துக்கு அவரது கணவரே முக்கிய காரணமென அதுல்யாவின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரது கணவர் கேரளத்துக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதன்பின், வெளியான அதுல்யாவின் உடற்கூராய்வில் அவர் தற்கொலையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அதுல்யா சேகர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.

அதில், அவரது கணவர் அவரை பெல்ட்டால் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்குவதும், அநாகரிக சொற்களைப் பயன்படுத்தி அவரை மன வேதனைக்கு ஆளாக்கியிருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும் பதிவான காட்சிகளில் அதுல்யா கடந்த பத்தாண்டுகளாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவரால் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக பேசியிருக்கிறார்.

இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அதுல்யாவின் கைப்பேசியில் பதிவாகியுள்ள தரவுகள் இருக்கும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த கைப்பேசி தற்போது போலீஸார் வசம் உள்ள நிலையில், அதிலுள்ள தரவுகள் ஆராயப்படும்போது மேலும் பல உண்மைகள் தெரிய வரும் என்கின்றனர்.

இந்த நிலையில், இந்த விடியோ ஆதாரத்தை வைத்து அவரது கணவரை மீண்டும் கைது செய்து விசாரிக்க அதுல்யா குடும்ப தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

Dead in UAE on birthday: Indian expat Athulya received chilling death threats in Sharjah

தில்லி திரும்பினார் பிரதமர் மோடி!

சீனா, ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 1) மாலை தில்லி திரும்பினார். இந்தியாவில் இருந்து ஆக. 29ஆம் தேதி ஜப்பான் புறப்பட்ட பிரதமர் மோடி, 4 நாள்கள் பயணங்களை முடித்துக்... மேலும் பார்க்க

ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு மாளிகையை காலி செய்தார். அவர் இன்று(செப். 1) புது தில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையிலிருந்து தமது உடமைகளை எடுத்துச் சென்றார். இதன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான பெரியளவிலான ஆதாரங்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம் என்றும், அதன் எதிரொலியாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தமது முகத்தைக்கூட காட்டத் தயங்கும் அளவுக... மேலும் பார்க்க

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பிரதமரின் பேச்சுவார்த்தை சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று கோழைத்தனமாக இருந்ததாகவும், டி... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து ... மேலும் பார்க்க