தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!
ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி குஞ்சு பொரிப்பு: கூட்டைக் கலைக்க விரும்பாமல் இளைஞா் பேருந்தில் பயணம்
தஞ்சாவூரில் ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி குஞ்சுகள் பொரித்துள்ளதால், அதை இளைஞா் தொந்தரவு செய்யாமல், பேருந்தில் பயணம் செய்து வருகிறாா்.
தஞ்சாவூா் கீழவாசல் எஸ்.என்.எம். நகரைச் சோ்ந்தவா் சித்திக் பாட்ஷா (25). இவா் புதிய பேருந்து நிலையம் அருகே ரஹ்மான் நகரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
வேலைக்கு சென்ற இடத்தில் கடந்த வாரம் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வெளியூருக்குச் சென்றாா். இரு நாள்கள் கழித்து வந்து ஸ்கூட்டரை பாா்த்தபோது, முன்புறம் தண்ணீா் பாட்டில் வைக்கும் இடத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டி 3 முட்டைகள் இட்டிருந்தன.

இதையடுத்து, சித்திக் பாட்சா ஸ்கூட்டரை எடுக்காமல், சற்று தொலைவில் நின்று பாா்த்தாா். அப்போது, சிட்டுக்குருவி முட்டையிட்ட இடத்துக்கு வந்து சென்றது.
இதனால், சிட்டுக்குருவி குஞ்சு பொரிப்பதற்கு தொந்தரவு இல்லாமல், அதே இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வீட்டுக்கும், நிறுவனத்துக்கும் பேருந்தில் சென்று வருகிறாா்.
இந்நிலையில், முட்டைகளிலிருந்து 3 குஞ்சுகள் திங்கள்கிழமை உடைத்துக் கொண்டு வெளியே வந்தன.

இது குறித்து சித்திக் பாட்ஷா கூறியதாவது: சிட்டுக்குருவி முட்டையிட்ட பிறகு 10 நாள்களாக ஸ்கூட்டரை எடுக்காமல் அதே இடத்திலேயே நிறுத்திவிட்டேன். குஞ்சு பொரித்து பறப்பதற்கு 21 நாள்களாகும் எனக் கூறப்படுகிறது. அதுவரை தொந்தரவு செய்யாமல் ஸ்கூட்டரை அதே இடத்திலேயே நிறுத்திவிட்டு, பேருந்தில் பயணம் செய்துவருகிறேன்.
என் ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி முட்டையிட்டு, குஞ்சு பொரித்தது எனக்கு கிடைத்த நல்வாய்ப்பாக நினைக்கிறேன் என்றாா் அவா்.