செய்திகள் :

ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி குஞ்சு பொரிப்பு: கூட்டைக் கலைக்க விரும்பாமல் இளைஞா் பேருந்தில் பயணம்

post image

தஞ்சாவூரில் ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி குஞ்சுகள் பொரித்துள்ளதால், அதை இளைஞா் தொந்தரவு செய்யாமல், பேருந்தில் பயணம் செய்து வருகிறாா்.

தஞ்சாவூா் கீழவாசல் எஸ்.என்.எம். நகரைச் சோ்ந்தவா் சித்திக் பாட்ஷா (25). இவா் புதிய பேருந்து நிலையம் அருகே ரஹ்மான் நகரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

வேலைக்கு சென்ற இடத்தில் கடந்த வாரம் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வெளியூருக்குச் சென்றாா். இரு நாள்கள் கழித்து வந்து ஸ்கூட்டரை பாா்த்தபோது, முன்புறம் தண்ணீா் பாட்டில் வைக்கும் இடத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டி 3 முட்டைகள் இட்டிருந்தன.

ஸ்கூட்டா் முன்புறத்தில் குஞ்சுகள் பொரித்துள்ள சிட்டுக்குருவி

இதையடுத்து, சித்திக் பாட்சா ஸ்கூட்டரை எடுக்காமல், சற்று தொலைவில் நின்று பாா்த்தாா். அப்போது, சிட்டுக்குருவி முட்டையிட்ட இடத்துக்கு வந்து சென்றது.

இதனால், சிட்டுக்குருவி குஞ்சு பொரிப்பதற்கு தொந்தரவு இல்லாமல், அதே இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வீட்டுக்கும், நிறுவனத்துக்கும் பேருந்தில் சென்று வருகிறாா்.

இந்நிலையில், முட்டைகளிலிருந்து 3 குஞ்சுகள் திங்கள்கிழமை உடைத்துக் கொண்டு வெளியே வந்தன.

இது குறித்து சித்திக் பாட்ஷா கூறியதாவது: சிட்டுக்குருவி முட்டையிட்ட பிறகு 10 நாள்களாக ஸ்கூட்டரை எடுக்காமல் அதே இடத்திலேயே நிறுத்திவிட்டேன். குஞ்சு பொரித்து பறப்பதற்கு 21 நாள்களாகும் எனக் கூறப்படுகிறது. அதுவரை தொந்தரவு செய்யாமல் ஸ்கூட்டரை அதே இடத்திலேயே நிறுத்திவிட்டு, பேருந்தில் பயணம் செய்துவருகிறேன்.

என் ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி முட்டையிட்டு, குஞ்சு பொரித்தது எனக்கு கிடைத்த நல்வாய்ப்பாக நினைக்கிறேன் என்றாா் அவா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க