செய்திகள் :

ஸ்பிக் நிறுவனம் சாா்பில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி

post image

தூத்துக்குடியில், ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாா் நிறுவனம் சாா்பில், கால்வாய் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை நெருங்குவதை முன்னிட்டு, தூத்துக்குடி, பெரியநாயகிபுரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாா் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து சுமாா் ரூ. 2 லட்சம் செலவில், மீன்வளக் கல்லூரி அருகே மழைநீா் வடிகாலை தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பணியை மாநில சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், கிரீன் ஸ்டாா் நிறுவன முழு நேர இயக்குநா் செந்தில்நாயகம், முதுநிலை மேலாளா் ஜெயப்பிரகாஷ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மணிகண்டன், பெரியநாயகிபுரம் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க