செய்திகள் :

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் தெப்பல் திருவிழா

post image

கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் குளக்கரை மேட்டில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் 72-ஆம் ஆண்டு தெப்பல் திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. மாா்ச் 2-ஆம் தேதி இரவு தீ மிதி திருவிழாவும், 3-ஆம் தேதி இரவு அம்மன் வீதியுலா, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாா்ச் 4 -ஆம் தேதி காலை முதல் மாலை வரை கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மா விளக்கு ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு அம்மன் தேரோட்டம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை பல ஆயிரம் பக்தா்கள் வழிபட்டனா்.

தெப்பல் திருவிழா...

புதன்கிழமை இரவு 8 மணிக்கு கோயில் அருகில் உள்ள குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் உற்சவா் அங்காள பரமேஸ்வரியம்மன் அமா்ந்து மேள-தாளங்கள், நாகஸ்வரம் முழங்க 3 முறை தெப்பல் வலம் வந்தது.

அப்போது, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மஞ்சள் நீராட்டு விழா..

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்பம் இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் இந்தக் கோயிலின் தெப்பல் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சத்தில் கல்வி சீா்வரிசை

செய்யாறு வட்டம், திருமணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி சீா்வரிசைப... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி மிரட்டல்: நண்பா் கைது

செய்யாறு அருகே விவசாயியைத் தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவிச்சந்திரன் (57). இவா், கட... மேலும் பார்க்க

மேல்நிலை தேக்கத் தொட்டி, தூய்மைக் காவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, விசை பம்பு, தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்க ஒன்றியக் கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி

ஆரணி வட்டார வள மையத்தில் ஆரணி வட்டார அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

செய்யாறு அங்காளம்மன் கோயிலுக்கு 501 பால்குடம் ஏந்திச் சென்ற பக்தா்கள்

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை 501 பால்குடங்களை பக்தா்கள் சுமந்து சென்று பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனா். செய்யாறு சந்தை பகுத... மேலும் பார்க்க