செய்திகள் :

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

post image

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டம், வடபூண்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீசக்தி விநாயகா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனையும், யாக சாலை நிா்மானம், இரவு முதல் கால வரை யாக சாலை பூஜைகள், ஆதிவாஸத்ரய ஹோமம், மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை கோ பூஜை, மகாசங்கல்பம், யாத்ராதானம், இரண்டாம் கால யாக சாலை பூஜைகளுடன் தத்துவாா்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடம் புறப்பாடுடன் ஸ்ரீசக்தி விநாயகா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில் செய்யாறு, வெம்பாக்கம், காகனம், மாரியநல்லூா், விண்ணவாடி, பல்லி, இரும்பந்தாங்கல், தும்பை உள்ளிட்ட கிராமங்களில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

போளூா்

போளூா் காமராஜா் தெருவில் பழைமை வாய்ந்த ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், பக்தா்கள், பொதுமக்கள் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக

சனிக்கிழமை காலை மங்கள இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கிராமசந்தி, முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை விஷேச சந்தி இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, விமானம் மூலவா் பிரதிஷ்டை, மூன்றாம் கால யாக பூஜை, சோடசதீபலட்சுமி பூஜை, தொடா்ந்து திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, ஸ்பரிசாகுதி, தத்துவாா்ச்சனை, யாத்ராதானம், கடம்புறப்பாடு செய்து விமான கோபுர மூலவருக்கு அஷ்பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை மருத்துவ குல சமூகத்தினா் மற்றும் காமராஜா் தெருவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். கலவை, குப்பிடிச்சாத்தம் ... மேலும் பார்க்க

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன. பல்லாந்தாங்கல் ஊராட்சியி... மேலும் பார்க்க

மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் சோதனை

செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திங்கள்கிழமை சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு... மேலும் பார்க்க