செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள் ஸ்ரீபெரும்புதூா் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் இந்த தொழிற்சாலையில், வெள்ளிக்கிழமை அட்டைகளை வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீப்பற்றியது.

இந்த தீ விபத்து குறித்து தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் கிடங்கில் ஏற்பட்ட தீ தொழிற்சாலையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினா் சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள அட்டைகள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகி... மேலும் பார்க்க