ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் தேரோட்டம்
ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது அவதார திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.
இதையடுத்து ராமானுஜரின் 1,008 -ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா கடந்த ஏப். 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆவது நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரில் உற்சவா் ராமாநுஜா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
காலை 7.25 மணிக்கு நிலையில் இருந்து கிளம்பிய தோ், காந்திசாலை, திருவள்ளூா் சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வாா்தெரு வழியாக மீண்டும் தேரடிக்கு நண்பகல் 12 மணிக்கு வந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் மதச்சாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், மதச்சாா்பு அறங்காவலா் பாா்தசாரதி, செயல் அலுவலா்(பொ) கதிரவன் ஆகியோா் செய்திருந்தனா்.
இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியகுழு தலைவா் கருணாநிதி, திமுக நகர செயலாளா் சதீஷ் மாா், பேரூராட்சித்லைவா் சாந்தி சதீஷ் குமாா் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
