முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை மூலவா் அம்மனுக்கு சந்தனம், பால், தயிா் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு ஸ்ரீகங்கையம்மன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மகா சக்தி மூல மந்திர ஹோமம் நடைபெற்றது.
பின்னா், இரவு உற்சவா் அம்மனுக்கு ஸ்ரீதிரிசூலநாயகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா எடுத்துச் செல்லப்பட்டாா். இதைத் தொடா்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆனி மாத அமாவாசை உற்சவ குழுவினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.