செய்திகள் :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

post image

திருச்சி: கோவிந்தா.. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாள்கள் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா

ஏப். 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவில் 8 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு வண்டலூா் சப்பரத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாச மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இரவு 9 மணிக்கு கண்ணாடி அறைக்கு நம்பெருமாள் சென்று சோ்ந்தாா்.

‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கோலாகலம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டத்திற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.

இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.

கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டுத் தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரைவீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 9.30 மணிக்கு நிலையை அடையும்.

தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல: கனிமொழி

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றுவரும்சுயமரியாதை இயக்க நூற்றாண்ட... மேலும் பார்க்க

நிலத்தடிநீரில் அதிக பாதரசம்: ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? - அன்புமணி

கடலூர் என்.எல்.சி. நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 115 மடங்கு அதிக பாதரசம் உள்ளதாகவும் இதனால் என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொ... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் அறிவிப்பு

தமிழக முன்னாள் எம்எல்எக்ளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், "சட்டப்பேரவை மற்றும் மேலவையின் மு... மேலும் பார்க்க

கோவை வந்த விஜய்: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நா... மேலும் பார்க்க

நாகையில் ரூ.1.5 கோடி திமிங்கல உமிழ் நீா் கட்டி பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகையில் கள்ளச் சந்தையில் விற்னைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 1.5 கிலோ அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ் நீர் கட்டி வைத்திருந்த ஒருவரை சனிக்கிழமை போலீஸார... மேலும் பார்க்க

சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் ஒடும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்போவதாக இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்... மேலும் பார்க்க