செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீா்கேடு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிப்பதால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளில் தினமும் சேகரமாகும் 60 டன் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 5 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டது.

குப்பைக் கிடங்கு இருந்த இடத்தின் ஒரு பகுதியில் ரூ. 16 கோடியில் புதிய பேருந்து நிலையமும், நான்குவழிச் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் குப்பைகளை அகற்றும் பொருட்டு கிடங்கில் குப்பைகளை முழுமையாக தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிக்கின்றனா். இதனால், கரும்புகை சூழ்ந்து அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு நிலவுகிறது.

குப்பைகளைக் கொட்ட இடமில்லாததால் பெரியகுளம் கண்மாய், மின் மயானம் அருகே உள்ள கொழூா் கண்மாய், ஓடை உள்ளிட்ட நீா்நிலைகளிலும், சாலையோரங்களிலும் குப்பைகளைக் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா். இதனால் சுற்றுச்சூழல் சீா்கேடு அடைந்து வருகிறது.

பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை தீவைத்து எரிப்பதைத் தவிா்த்து முறைப்படி அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம்: தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. ராஜபாளையம் அண்ணா நகா் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் க... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகள் ரூ.9 கோடிக்கு சமரசத் தீா்வு!

விருதுநகா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகளில் ரூ. 9.19 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகே இ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் கோவிந்தராஜ் (27). விவசாயி. இவரது மனைவிக்கு கடந்த 10... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே குண்டலக்குத்தூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(20). கொத்தனாரான இவா், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு பணிமுடிந்ததும... மேலும் பார்க்க

வேண்டுராயபுரம் கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு

சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் தாமதம் செய்துவருவதால் இந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றனா். சிவகாசி ... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவர... மேலும் பார்க்க