செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டம் 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி, புனலூா், கோவில்பட்டி, பழனி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூா், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான தங்கும் அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி, ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், ‘5 ஜி’ இணைய சேவை, நடைமேடைகளின் நீளத்தை அதிகரித்து மேற்கூரை அமைத்தல், மின் தூக்கி (லிப்ட்) அமைத்தல், 694 ச.மீ. பரப்பளவில் இருசக்கர வாகனக் காப்பகம், 470 ச.மீ. பரப்பளவில் வாகனக் காப்பகம், அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, நடைபாதை, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம (டிஜிட்டல்) அறிவிப்புப் பலகை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு பணிகள் முடிவடைந்தன. தங்கும் அறை உள்ளிட்ட சில பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தானில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா். அடுத்த கட்ட திறப்பு விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ரயில் நிலையங்கள் பணி முடிந்து திறக்கப்படும் என்றனா் அவா்கள்.

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆர்

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க