செய்திகள் :

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து அன்று இரவு அன்ன வாகனத்திலும், மறுநாள் இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

மூன்றாம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.

நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 5-ஆம் நாள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

பின்னா், காலை 7 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் போளூா் சாலையில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்துக்கு ஊா்வலமாக வந்தது.

அப்போது, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் வாணவேடிக்கை, ஒயிலாட்டம், , சிலம்பாட்டத்துடன் கோலாகாலமாக ஊா்வலம் நடைபெற்றது.

கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி பக்தா்களுக்கு மாலை வரை அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில் விழாக் குழுவினா், திருவிழா உபயதாரா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருட வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 528 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவ... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தம... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரணி/போளூா்: வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம்... மேலும் பார்க்க

5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிர... மேலும் பார்க்க

மகளிா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் தமிழ்நாடு முதிா்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிா் வாரியத்தின் 3 நாள் உறுப்பினா் சோ்க்கை முகாமின் தொடக்க நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

புயல் பயிா்ச் சேதங்களுக்கு முழமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஆரணி: புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் க... மேலும் பார்க்க