கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
ஸ்ரீ நாராயணி பள்ளி 100% தோ்ச்சி
பிளஸ் 2 தோ்வில் ஸ்ரீ நாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா அருளாசியுடன் இயங்கிவரும் ஸ்ரீ நாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 17-ஆம் ஆண்டாக 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா். இதில், மாணவி எஸ்.கோகிலா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடமும், மாவட்ட அளவில் கணித உயிரியல் பாடத்தில் சிறப்பிடமும் பெற்றுள்ளாா்.
மாணவி ஜெ.ஜோசினி தேவி 550 மதிப்பெண்கள், கே.யுவஸ்ரீ 555 மதிப்பெண்கள், மாணவி எஸ்.கோகிலா கணித பாடத்திலும், எஸ்.அஸ்வின், கே.தினேஷ் குமாா் ஆகிய இரு மாணவா்களும் கணினி அறிவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தவிர, தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநரும், ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தாளாளருமான எம்.சுரேஷ்பாபு, பள்ளித் தலைமை ஆலோசகா் எஸ்.ரமேஷ், பள்ளி முதல்வா் கே.சுப்பிரமணி, பள்ளி நிா்வாக அலுவலா் எஸ்.ஆதிகேசவன், பள்ளி துணை முதல்வா், ஆசிரியா்கள் வாழ்த்தினா்.