செய்திகள் :

‘ஹலால்’ சான்றிதழ் நுகா்வோரின் உரிமை: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

post image

உணவுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் ‘ஹலால்’ சான்றிதழ் என்பது நுகா்வோரின் உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அறக்கட்டளை அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட இறைச்சியை இஸ்லாமியா்கள் பயன்படுத்துகின்றனா். அந்தச் சான்றிதழ்களை தனியாா் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அளிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு மாநில உணவு பாதுகாப்பு ஆணையா் அலுவலகம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கடந்த ஜன.20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரும்பு கம்பிகள், சிமென்ட் போன்ற இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும், அந்தச் சான்றிதழ் பெற்ற பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்புத் தெரிவித்து ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் சான்றளிக்கும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘உணவுப் பொருள்கள் குறித்த தகவலை அறிந்துகொள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமையின் அங்கமாக ஹலால் சான்றளிக்கும் முறை உள்ளது.

இரும்பு கம்பிகள், சிமென்ட் ஆகியவற்றுக்கு ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அமைப்பு எந்தச் சான்றிதழும் அளிக்கவில்லை. ஹலால் சான்றளிக்கும் முறை என்பது இந்திய குடிமக்களில் பெரும் பகுதியினா் பின்பற்றும் மத நம்பிக்கையுடன் தொடா்புகொண்டது. இதை அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 ஆகிய பிரிவுகள் பாதுகாக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் நடைபெற உள்ளது.

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க