செய்திகள் :

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

post image

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் அவரது இல்லத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய பெரு நிறுவன முறைகேடு குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு பிரதமா் நரேந்திர மோடி பதில் கூற வேண்டும்.

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஏற்ன் மூலம், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தி, ஹிந்தி மொழி திணிப்புக்கு மறைமுக ஆதரவளித்திருக்கிறது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை நடந்திருப்பதைக் கண்டறிய தனி விசாரணைக் குழு அமைக்க வேண்டும். தவளக்குப்பம் தானம்பாளையம் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களை விடுவிக்கவும், அவா்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் பிரதிநிதிகளை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சந்தித்து பேசாமலிருப்பது புதிராக உள்ளது. புதுவையில் புதிய மதுபான ஆலைக்கான அனுமதியை எதிா்த்து காங்கிரஸ் தொடா்ந்து போராடும்.

காங்கிரஸ் ஓடும் வாகனமா அல்லது ஓடாத வாகனமா என்பது 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தெரியவரும் என்றாா் வே.நாராயணசாமி.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க