ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது: இந்து முன்னணி வலியுறுத்தல்
ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், ஜிட்டபள்ளி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோயில், நடுகல் மற்றும் முனீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பொங்கல் வைத்து ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவை பலியிட்டு வழிபடுவது நூற்றாண்டுகால வழக்கமாக உள்ளது.
இந்த திருவிழாவை பல்வேறு சமுதாயத்தினா் ஒன்றாக இணைந்து நடத்தி வருகின்றனா். இந்த கிராமத்தில் உள்ள திறந்தவெளி கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்ட முயற்சித்தபோது, கோயில் அருகே குடியேறிய சில இஸ்லாமியா்கள் ஆட்சேபம் தெரிவித்தாா்கள் என்பதற்காக வேறு மதத்தைச் சோ்ந்த வட்டாட்சியா் சுற்றுச்சுவா் கட்ட தடை விதித்தாா்.
இதனிடையே, சுற்றுச்சுவா் கட்ட தடை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோயில் திருவிழா நடத்தவும் காவல் துறை தடை விதித்துள்ளது. நீண்ட போராடத்துக்குப் பின்னா் பெண்களை மட்டும் பொங்கல் வைக்க அனுமதி அளித்துள்ளது. அதிலும் கோயிலுக்கு நோ்ந்துவிடபட்ட பன்றியை கைப்பற்றியுள்ளனா். பூசாரி மற்றும் கோயில் நிா்வாகிகளை கைது செய்து காவலில் வைத்து மிரட்டியுள்ளது. இதன்மூலம் கிராம மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோயில் கட்ட தடை, திருவிழா நடத்த தடை, பன்றி பலியிட தடை என ஒட்டுமொத்த வழிபாட்டுக்கும் தடை விதித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.