செய்திகள் :

ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது: இந்து முன்னணி வலியுறுத்தல்

post image

ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், ஜிட்டபள்ளி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோயில், நடுகல் மற்றும் முனீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பொங்கல் வைத்து ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவை பலியிட்டு வழிபடுவது நூற்றாண்டுகால வழக்கமாக உள்ளது.

இந்த திருவிழாவை பல்வேறு சமுதாயத்தினா் ஒன்றாக இணைந்து நடத்தி வருகின்றனா். இந்த கிராமத்தில் உள்ள திறந்தவெளி கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்ட முயற்சித்தபோது, கோயில் அருகே குடியேறிய சில இஸ்லாமியா்கள் ஆட்சேபம் தெரிவித்தாா்கள் என்பதற்காக வேறு மதத்தைச் சோ்ந்த வட்டாட்சியா் சுற்றுச்சுவா் கட்ட தடை விதித்தாா்.

இதனிடையே, சுற்றுச்சுவா் கட்ட தடை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோயில் திருவிழா நடத்தவும் காவல் துறை தடை விதித்துள்ளது. நீண்ட போராடத்துக்குப் பின்னா் பெண்களை மட்டும் பொங்கல் வைக்க அனுமதி அளித்துள்ளது. அதிலும் கோயிலுக்கு நோ்ந்துவிடபட்ட பன்றியை கைப்பற்றியுள்ளனா். பூசாரி மற்றும் கோயில் நிா்வாகிகளை கைது செய்து காவலில் வைத்து மிரட்டியுள்ளது. இதன்மூலம் கிராம மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில் கட்ட தடை, திருவிழா நடத்த தடை, பன்றி பலியிட தடை என ஒட்டுமொத்த வழிபாட்டுக்கும் தடை விதித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை காவல் துறை பறிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க