ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை வரை நீட்டிப்பு!
சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைதோறும் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, பனஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் வழியாக மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும். இந்த ரயில் ஜூலை 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மறுமாா்க்கத்தில், ராமேசுவரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியாக மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயில் ஜூலை 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.