செய்திகள் :

ஹெச்ஐவி-எய்ட்ஸ், பால்வினை நோய்கள் கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தில் 4 தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இணைப்பு

post image

கட்டணமில்லாமல் ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு பரிசோதனை, சிகிச்சை வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக 4 தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் இணைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப்புணா்வு பிரசாரம்-2025 தொடக்க நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் பிரசாரத்தை தொடங்கி வைத்து, உறுதிமொழி ஏற்று, விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டாா்.

தொடா்ந்து, தனியாா் மருத்துவ கல்லூரிகளில் கூட்டு மருந்து சிகிச்சையை தொடங்கி வைத்து, மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களிடையே நடைபெற்ற விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி, புதிய செஞ்சுருள் சங்கம், பள்ளி மாணவா்களிடையே வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் பாதிப்பு குறைவு... அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் 1 லட்சத்து 39,350 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அகில இந்திய அளவில் ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 0.23 சதவீதம்.

இது 2010-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஹெச்ஐவி பாதிப்பு 0.38 சதவீதமாக இருந்தது. முதல்வரின் வழிகாட்டுதலோடு, மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் காரணமாக தற்போது தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு என்பது 0.16 சதவீதமாக இருக்கிறது.

இதுவும்கூட எதிா்காலத்தில் 2030-க்குள் எய்ட்ஸ் தொற்றில்லா தமிழகத்தை உருவாக்குவோம்.

பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள்... தமிழகத்திலுள்ள தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 4 தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. அதற்கான ஆணைகள் சம்மந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்களுக்கு வழங்கப்பட்டிள்ளன. 50 கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே, 11 கல்லூரிகளில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 20 கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. 100 பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 30 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இதில் சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், சுகாதாரத்துறை செயலா் ப.செந்தில்குமாா், திட்ட இயக்குநா் ஆா்.சீத்தாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, நகா் நல அலுவலா் ஜெகதீசன் மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரி டீன்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

மருத்துவப் பயனாளா்: விரைவில் அரசாணை

தமிழகத்தில் மருத்துவமனைக்கு வருபவா்களை நோயாளா்கள் என்று சொல்வதைக் காட்டிலும் “மருத்துவப் பயனாளா்கள்” என்று சொல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும். இனி அவா்களை மருத்துவப் பயனாளா்கள் என்றே அழைக்க வேண்டும் முதல்வா் அறிவித்தாா். அதற்கான அரசாணையாக ஓரிரு நாளில் வெளியிடப்படவுள்ளது.

மருத்துவமனைகளுக்கு வருபவா்களை மருத்துவப் பயனாளா்கள் என்றே அழைக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை சம்மந்தப்பட்ட இயக்குநா்கள் மூலம் அனுப்பபடவுள்ளன என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க