செய்திகள் :

`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி' - காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு, அபராதம்

post image

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பளுகலில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை பைக் பேரணி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த பைக் பேரணிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தலைமை வகித்தார்.

கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கண்ணுமாமூடு, புத்தன்சந்தை, மேல்புறம், கழுவன்திட்டை வழியாக குழித்துறை சந்திப்பு வரை இருசக்கர பேரணி நடத்தினர்.

பின்னர் ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தேசிய பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

காங்கிரஸ் பைக் பேரணி

அதே சமயம் பைக் பேரணியில் கலந்துகொண்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பத்ர்ட் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார்.

மேலும் பைக் பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்டிற்கு போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் பைக் பேரணி சென்ற தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ

இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அதையும் மீறி பைக் பேரணி நடத்தியதாக போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பளுகஸ் போலீஸ் எஸ்.ஐ இந்துசூடன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Niti Aayog: ``மகனுக்காக டெல்லியில் தவம் இருக்கிறார்..'' - ஸ்டாலின் குறித்து பேசிய ஜெயக்குமார்

டெல்லியில் இன்று (மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம்,... மேலும் பார்க்க

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துக்கு ட்ரம்ப் அதிரடி உத்தரவு; பெல்ஜிய இளவரசியின் படிப்பு என்னவாகும்?

அமெரிக்காவின் பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் காஸா போர் உள்ளிட்ட விவாகரங்களை கண்டித்து ப... மேலும் பார்க்க

`கோவை 10 தொகுதிகளும் காலி' - ஷாக் கொடுத்த சர்வே.. - உடன்பிறப்புகளுக்கு செந்தில் பாலாஜி வார்னிங்!

திமுகவுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்அமைச்சர் பதவியை பறிகொடுத்தாலும், செந்தில் பாலாஜிக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் என்கிற பவர்ஃபுல்லான பதவியை திமுக தலைமை கொடுத்துள்ளது. ஏற்கெனவே கோவை, கரூர் மாவட்டங்கள் அவர... மேலும் பார்க்க

Niti Aayog: 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின், இம்முறை பங்கேற்றது ஏன்? - சீமான் கேள்வி

சென்னையில் இன்று (மே 24) சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.“சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி எப்போதோ தேர்தல் பணிகளைத் தொடங்கி செய்து வருகிறது. கிட்டத்தட்ட 100 வேட்பாளர்... மேலும் பார்க்க

Niti Aayog: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் பங்கேற்பு; மம்தா, சித்தராமையா புறக்கணிப்பு..

டெல்லியில் இன்று( மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இந்தநிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

``திமுக ஆட்சியில் இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு..'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

தஞ்சாவூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்தஞ்சாவூரில் அதிமுக சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர... மேலும் பார்க்க