செய்திகள் :

ஹோண்டா கோல்டு விங் டூரின் 50-வது ஆண்டு விழாவுக்கான பைக் அறிமுகம்!

post image

ஹோண்டாவின் கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

50 ஆண்டுகளாக சொகுசு பயணங்களுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய பைக்குகளை தயாரித்துவரும் ஹோண்டா மோட்டர்சைக்கில் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோண்டா கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான புதிய பதிப்பை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விற்பனை டாப் டீலர்களிடம் மட்டும் துவங்கியுள்ளது.

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் நீண்ட தூர பயனாளர்களுக்கு ஏற்றவகையிலான சொகுசு இருக்கை, 7 அங்குல திரை, நேவிகேஷன், ஆடியோ கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவை உள்ளன.

மேலும், 50 ஆண்டு விழாவை ஒவ்வொரு முறையும் குறிப்பிடும் வகையில் பைக்கை ஆன் செய்யும் போது since 1975 எனத் திரையில் தோன்றும். அதோடுகூடவே மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்கள், புளூடூத், 2 யுஎஸ்பி சி சாக்கெட், சக்கரத்தில் காற்று இருப்புக்கான மானிட்டர் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

முக்கிய விவரக் குறிப்புகள்

ஹோண்டா கோல்டு விங்கில் 1833cc லிக்விட் கூல்ட் என்ஜின், 4 ஸ்ட்ரோக் 24 வால்வுகளுடன் தட்டையான ஆறு சிலிண்டர்கள் 125 குதிரைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 7 ஸ்பீட் கியர் பாக்ஸ் உள்ளது.

ABS மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவற்றுடன் இணைந்து பாதுகாப்பான சவாரிக்கு உத்தரவாதம் அளிக்கிறது இந்த கோல்டு விங் பைக். நான்கு சவாரி முறைகளுடன் வரும் இந்த பைக்கில் டூர், ஸ்போர்ட், எகான் மற்றும் ரெயின் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த பைக் போர்டோ சிவப்பு மெட்டாலிக் (Bordeaux Red Metallic colour) நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குருகிராமில் கிடைக்கும் என்றும் இதன் விலை: ரூ.39.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இது கோல்டு விங் லட்சிணையுடன் since 1975 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!

அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறனுடன் ரெட்மி பேட் 2!

ஷாவ்மியின் துணை நிறுவனமான ரெட்மியின் பேட் 2 (Pad 2) ஆண்ட்ராய்டு டேப்லட்டின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலின் அடுத்த வரிசையாக 4 ஜி ... மேலும் பார்க்க

நிஃப்டி 0.74% சரிவு; சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளின் பங்குகள் இன்றைய பங்கு வர்த்தகத்தின்போது பின்னடைவை சந்தித்ததன் எதிரொலியாக, நிஃப்டி மூன்றாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.சென்செக்ஸ் 363.24 புள்ளிகள் அதாவது 0.... மேலும் பார்க்க

இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

கொல்கத்தா: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை 56 சதவிகிதம் குறையும் என... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (திங்கள்கிழமை) 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக நிலைபெற்றது. இதற்கு டாலர் பலவீனமாக இருப்பதும், ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் ம... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: உலகளாவிய சந்தைகளில் மந்தமான போக்குகளைத் தொடர்ந்ததால் இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.ரஷ்ய-உக்ரைன் மோதல், பிரெண்ட் கச்சா எண்... மேலும் பார்க்க