செய்திகள் :

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

post image

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரமலானின் ஜும்மா நோன்பும் வருகிற மார்ச் 14 அன்று ஒரே நாளில் நிகழ்கிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதி உள்பட10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சம்பல் எஸ்பி ஷ்ரீஷ் சந்திரா, “இரு சமூகங்களும் தங்களின் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காகவும், சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

இரு சமூகங்களுக்கிடையே எந்தக் குழப்பமோ பதற்றமோ ஏற்படாமல் இருக்க 'சௌபாய்' எனப்படும் ஊர்வலம் நடைபெறும் பாதையில் அடையாளம் காணப்பட்டுள்ள பத்து மசூதிகள் தார்பாயால் மூடிவைக்கப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான்” என்று அவர் கூறினார்.

மேலும், குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை நாளன்று தொழுகையின் நேரம் சௌபாய் ஊர்வலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என்றும், இரு சமூகத்தினரிடையே சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்வலத்திற்கு முன்போ பின்போ வெள்ளிக்கிழமை தொழுகைக்கான நேரம் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த நாள்களில் வெளியாட்கள் மசூதிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

உள்ளூர் அதிகாரிகள், உ.பி. காவல் துறையினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட நாளில் எந்தவித குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மிகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி ஹோலியன்று சம்பலில் உள்ள ஷாகி ஜமா மசூதி, லடானியா வாலி மசூதி, தானே வாலி மசூதி, ஏக ராத் மசூதி, குருத்வாரா சாலை மசூதி, கோல் மசூதி, கஜூர் வாலி மசூதி, அனார் வாலி மசூதி மற்றும் கோல் துக்கான் வாலி மசூதி ஆகிய பத்து மசூதிகள் தார்பாலினால் மூடப்படவுள்ளன.

மேலும், மதக் கலவரம் எதுவும் நடைபெறாமல் இருக்க இரு சமூகத்தின் தலைவர்களும் சம்பல் காவல்துறையினரால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரு மாதங்களுக்கு முன் சம்பல் ஜாமா மசூதி கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி ஆய்வு நடத்த அதிகாரிகள் சென்றபோது கலவரம் ஏற்பட்டு 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க