செய்திகள் :

10 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: முதல்வர் தாமி!

post image

மத்திய அரசின் கொள்கைகள் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

டேராடூனில் இன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 2 நாள் நிகழ்ச்சியில் முதல்வர் தாமி உரையாற்றியனார். அப்போது அவர் கூறுகையில், சமூக நீதி போன்ற முக்கியமான தலைப்பில் தேசிய அளவிலான சிந்தனைத் திருவிழா ஏற்பாடு செய்யப்படுவது தனது மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ் ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகள் என்ற அடிப்படை தாரக மந்திரத்துடன் இன்று நாட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக நாட்டின் சமூக நலத்துறை ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே என்று கருதப்பட்டது. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், திட்டங்கள் கரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் சுமார் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாட்டில் ஒருபுறம் முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருவதாகவும், மறுபுறம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேபோன்று பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சுயதொழில், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் மிகவும் பின்தங்கிய வகுப்பினரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்களும் மறுவாழ்வு மையங்களும் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!

போபால்: போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!

வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(... மேலும் பார்க்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!

புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.பிகார் ஷ... மேலும் பார்க்க

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க