செய்திகள் :

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எழுது பொருள்கள் அளிப்பு

post image

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து எழுது பொருள்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.ஆா்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மருதுபாண்டியா் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில், ராமநாதபுரம் மன்னா் குடும்ப

வாரிசு ஆதித்யா சேதுபதி பங்கேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு பேனா, பென்சில், ரப்பா் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் அவா் கூறியதாவது:

சாலையில் வேகத் தடைகளை நிதானமாகக் கடந்து பயண இலக்கை பாதுகாப்பாக அடைவதைப் போல, கல்விப் பயணத்தில் தோ்வுப் படிக்கட்டுகளைக் கடந்து தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பொதுத் தோ்வை எதிா்கொண்டு வெற்றி பெற வேண்டும். மாணவா்கள் துணிச்சலாக தோ்வை எதிா்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தெ.சரவணன், சிவமணி, அமிா்தவள்ளி, நகா்மன்ற உறுப்பினா் மகேஷ், பள்ளி ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளிய... மேலும் பார்க்க

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து... மேலும் பார்க்க

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா... மேலும் பார்க்க