செய்திகள் :

10 பேரை கடித்து குதறிய வெறிநாய்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சுமாா் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது.

காட்டுமன்னாா்கோவில் ஓமாம்புலியூா் சாலையில் ஜெயராமன் நகா் பகுதியைச் சோ்ந்த தலைமையாசிரியா் கலைராஜை (48) அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென அவரது காலில் கடித்தது. உடனே, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டனா்.

தொடா்ந்து, கருணாகரநல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (25), கீழராதாம்பூா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (48), நாட்டாா்மங்கலம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த்ராஜ் (35) ஆகியோரை அந்த நாய் கடித்து குதறியது.

இதேபோல, கண்டமங்கலம் ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் சுரேஷ் (45), பரணி(40), உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வம் (50) உள்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது.

இவா்கள் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தப் பகுதியில் நாய் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுக... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியா... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பயற்சி வகுப்பை ம... மேலும் பார்க்க

கடலூா்: 25 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 25 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கடலூா் டாஸ்மாக் மேலாளா் பா.மகே... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் கிராமம் அருகில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க