செய்திகள் :

10-ம் வகுப்பு மாணவர்களிடம் வீடியோ காலில் ஆபாசம்; போக்சோ-வில் ஆசிரியை கைது

post image

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் பள்ளி ஆசிரியை (35) ஒருவர் இரவு நேரத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோபர்கைர்னே பகுதியில் வசிக்கும் அந்த மாணவன் 10 வகுப்பு படித்து வருகின்றான். அவன் இரவு நேரத்தில் அடிக்கடி வீடியோ காலில் பேசுவதை அவனது தாயார் பார்த்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த மாணவனின் தாயார் தனது மகனின் மொபைலில் இருந்த வீடியோ கால் பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது அப்பெண் தனது ஆடைகளை களைந்து அந்தரங்க உறுப்புகளை காட்டுவது போன்று வீடியோ காட்சிகள் இருந்தது.

இதையடுத்து மாணவனிடம் அப்பெண் யார் என்று விசாரித்த போது அது ஆசிரியை என்று தெரிய வந்தது. அங்குள்ள உல்வே பகுதியில் இருக்கும் பள்ளியில் அப்பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து மாணவனின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 35 வயது ஆசிரியையை கைது செய்தனர். போலீஸார் அந்த ஆசிரியை மொபைல் போனை பறிமுதல் செய்து அதனை சோதனை செய்து பார்த்தபோது மேலும் இரண்டு மாணவர்களிடம் கடந்த ஒரு ஆண்டாக இது போன்று வீடியோ காலில் பேசி வந்தது தெரிய வந்தது.

ஆனால் அந்த மாணவனின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. கைது செய்யப்பட்ட ஆசிரியை 5-7ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இது தவிர 10-வது வகுப்பு மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கோச்சிங் கொடுத்து வந்தார். அப்படி வரும் மாணவர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலமும் ஆசிரியை தொடர்பில் இருந்துள்ளார். அப்படி ஏற்பட்ட தொடர்புதான் இப்போது நிர்வாண வீடியோ காலில் வந்து நின்றது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்புதான் மும்பையில் பிரபல பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை மாணவனை காரில் அழைத்துச் சென்று நட்சத்திர ஹோட்டல்களில் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த ஆசிரியையின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரும் விருப்பப்பட்டுத்தான் உறவில் ஈடுபட்டனர் என்று கூறி ஆசிரியையை ஜாமீனில் விடுதலை செய்தது.

நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின இளைஞர் ஒருவர் கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இந... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா க... மேலும் பார்க்க

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த ... மேலும் பார்க்க

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க