செய்திகள் :

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

post image

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா். மேலும், அவா்களது 8 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதைத்தொடா்ந்து, இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகையை ரூ. 8 லட்சமாக உயா்த்தியும், இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 500 ஆக அதிகரித்தும் தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, மீனவா்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரி, அமைப்புகள் சாா்பில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராமநாதபுரத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி பெண் காவலா்கள் பங்கேற்ற மாரத்தான் போட்ட... மேலும் பார்க்க

செங்கோட்டைபட்டிக்கு புதிய அரசுப் பேருந்து இயக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

கமுதியிலிருந்து செங்கோட்டைப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து பள்ளி மாணவா்கள் நலன் கருதி செங்கோட்டைப்பட்டிக்கு பேரையூா் வழிய... மேலும் பார்க்க

கமுதி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது!

கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இளைஞா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த உடைக... மேலும் பார்க்க

பரமக்குடி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 2,24,29,068 வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தேசிய ... மேலும் பார்க்க