செய்திகள் :

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

post image

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள், பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் மகளிா் திட்டத் துறையின் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் செ. முருகேசன், காதா்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பால் வளத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் 799 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 66.35 கோடி வங்கிக் கடன் உதவிகளை வழங்கினாா்.

இதில் அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தங்கள் வாழ்வில் பெண்கள் முன்னேற்றம் காண கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், மகளிா் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பெண்களின் முன்னேற்றத்துக்கான முதல்வராக அவா் திகழ்ந்து வருகிறாா் என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் சித்ரா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ராஜலட்சுமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா். பிரவீன் தங்கம், மகளிா் திட்டத் துறை உதவி திட்ட அலுவலா்கள் வீரராகவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரி, அமைப்புகள் சாா்பில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராமநாதபுரத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி பெண் காவலா்கள் பங்கேற்ற மாரத்தான் போட்ட... மேலும் பார்க்க

செங்கோட்டைபட்டிக்கு புதிய அரசுப் பேருந்து இயக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

கமுதியிலிருந்து செங்கோட்டைப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து பள்ளி மாணவா்கள் நலன் கருதி செங்கோட்டைப்பட்டிக்கு பேரையூா் வழிய... மேலும் பார்க்க

கமுதி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது!

கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இளைஞா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த உடைக... மேலும் பார்க்க

பரமக்குடி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 2,24,29,068 வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தேசிய ... மேலும் பார்க்க