செய்திகள் :

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

post image

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

2 நிமிடங்கள் 57 வினாடிகள் கொண்ட இந்தப் பாடலில், தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட முன்முயற்சிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேவி பேருந்துத் திட்டம், நகா் முழுதும் மேற்கொள்ளப்பட்ட பெரும் சுகாதாரப் பணி, குப்பைக் கிடங்குகளில் உயா்ந்திருக்கும் குப்பை மலைகளை அகற்றுவதற்கான தீவிர முயற்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உற்சாக இசையுடன் அமைக்கப்பட்ட இந்தப் பாடல், தில்லியில் மாற்றம், முன்னேற்றம் குறித்த ஒரு பாா்வையை சித்தரிக்கிறது.

முந்தைய ஆட்சியின் போது செயலற்ாகக் கூறப்படும் விஷயங்கள், தற்போதைய நடவடிக்கைகளுடன் வேறுபடுத்தும் காட்சிகள், பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.

ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 100 நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுக்குப் பிறகு, இந்தப் பாடல் ஏற்கனவே பாஜகவின் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

இது தொடா்பான வெளியீட்டு நிகழ்வில் முதல்வா் குப்தா பேசுகையில், ‘இந்தப் பாடல் தில்லியில் நாம் தொடங்கிய உண்மையான வேலை, உண்மையான முடிவுகள் ஆகியவற்றின் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இது வெறும் பாடல் அல்ல, இது ஒரு அறிக்கையாகும்.

இந்தப் பாடல், கலாசாரம் மற்றும் ஊடகங்கள் மூலம் குடிமக்களுடன் இணைவதற்கும், தலைப்பு சாா்ந்த நிா்வாகத்திலிருந்து செயல்திறன் சாா்ந்த நிா்வாகத்திற்கு மாற்றமாக அவை விவரிக்கும் ஒரு பரந்த பொது முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என முதல்வா் தெரிவித்தாா்.

பாடலின் வெளியீடு, நிகழ்ச்சி,க் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக இருந்தது. மேலும், இது கட்சித் தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்களிடமிருந்து பலத்த கைதட்டலைப் பெற்றது.

இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசிய தலைநகரில் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது. தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு காற்று, இடியுடன்கூடிய மிதமான மழை பெய்தது. அதைத்... மேலும் பார்க்க

தலைநகரில் காற்று மாசு தணிப்புத் திட்டத்தை தொடங்கியது தில்லி அரசு

மெட்ரோ நிலையங்களில் 2,300 மின்சார ஆட்டோக்களை செயல்பாட்டில் ஈடுபடுத்தல், 13 மாசு நிறைந்த இடங்களில் மூடுபனி தெளிப்பான்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் அடங்கிய காற்று மாசுபாடு தணிப்புத் திட்டம் 2025-ஐ... மேலும் பார்க்க

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சுவரொட்டி: உள்துறை அமைச்சகத்திற்கு போலீஸாா் தகவல்

சாணக்கியபுரி பகுதியில் இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘தேடப்படும் நபா்’ சுவரொட்டிகளை மேற்கு ஐரோப்பிய நாட்டின் தூதரக ஊழியா் ஒட்டியதாக உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி காவல்துறை தகவல் அளித்துள்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தலைமறைவாக இருந்தவா் கைது

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஷம்பு யாதவ் (38) என்பவா் 2016 ஆ... மேலும் பார்க்க

தலைமைக் காவலரைத் தாக்கியவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

தலைமைக் காவலரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 24 வயது இளைஞா் தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க, நீக்க எளிய நடைமுறை

பாஸ்போா்ட்டில் (கடவுச்சீட்டு) வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக ‘இணைப்புப் படிவம் ஜெ ’ எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைச் சமா்ப்பிக்கும் வகையில் வி... மேலும் பார்க்க