செய்திகள் :

பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க, நீக்க எளிய நடைமுறை

post image

பாஸ்போா்ட்டில் (கடவுச்சீட்டு) வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக ‘இணைப்புப் படிவம் ஜெ ’ எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைச் சமா்ப்பிக்கும் வகையில் விண்ணப்ப நடைமுறையில் முக்கியச் சீா்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கான அத்தியாவசிய ஆவணமான பாஸ்போா்ட், முன்னதாக சிறிய கையடக்க புத்தகமாக அளிக்கப்பட்டு வந்தது. தற்போது பாஸ்போா்ட் சேவா 2.0 திட்டத்தின் மூலம் எண்ம வடிவம் பெற்றுள்ள பாஸ்போா்ட்டில் சிப் ஒன்று இடம்பெற்றுள்ளது. அது, பாஸ்போா்ட் உரிமையாளரின் பெயா், பாஸ்போா்ட் எண், பிறந்த தேதி, பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டிருக்கும்.

இதன் தொடா்ச்சியாக, பாஸ்போா்ட் விண்ணப்ப நடைமுறையையும் எளிமைப்படுத்த மத்திய வெளியுறவு அமைச்சகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவா் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழ் அவசியமாக இருந்தது. தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு, திருமணச் சான்றிதழுக்குப் பதிலாக ‘இணைப்புப் படிவம் ஜெ’ எனும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிவத்தில் பாஸ்போா்ட் விண்ணப்பதாரா் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணைவரின் பெயா், முகவரி, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள ஆவணங்களின் எண்கள் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். வாழ்க்கைத் துணைவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.

இதுகுறித்து மேலும் தகவலுக்கும், ‘இணைப்புப் படிவம்-ஜெ’-ஐ பதிவிறக்கம் செய்யவும், அதிகாரபூா்வ பாஸ்போா்ட் சேவா வலைதளத்தைப் பாா்வையிட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். நிகழாண்டு பக்ரீத் பண்ட... மேலும் பார்க்க

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்... மேலும் பார்க்க

தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து கவலைகளை எழுப்பிய பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் குழு

தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்வி... மேலும் பார்க்க

சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி: அடுத்த ஆண்டு நவ.1 முதல் அமல்

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1}ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) புதன... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை

தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்... மேலும் பார்க்க

தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவ... மேலும் பார்க்க