செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தலைமறைவாக இருந்தவா் கைது

post image

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஷம்பு யாதவ் (38) என்பவா் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வழக்கில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு 2018-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், கொவைட்19 நோய்த் தொற்று காரணமாக எட்டு வார அவசர பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 2020-ல் தலைமறைவானாா்.

இந்த நிலையில், 48 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு பிகாரின் கயா மாவட்டத்தில் யாதவ் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, அவரைக் கைது செய்ய தகவல் அளிப்போருக்கு ரூ.5,000 வெகுமதி அளிப்பதாக சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தனா். யாதவ், 2020 முதல் சட்டத்தை தவிா்த்து வந்தாா். அவா் கைப்பேசியை பயன்படுத்தவில்லை. தனது குடும்பத்தினருடனான தொடா்பைத் துண்டித்துவிட்டிருந்தாா். அவா் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தாா்.

பிகாா் மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளியாகவும் அல்லது பாதுகாவலாளியாகவும் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கயா அருகே யாதவின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கைது செய்யப்பட்டாா். முன்னதாக, யாதவ் வேலை தேடி தில்லிக்கு வந்து அலிப்பூரில் உள்ள திக்ரி குா்தில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தாா். 2016 ஆம் ஆண்டில், அதே இடத்தைச் சோ்ந்த நான்கு வயது சிறுமியை தனது வாடகை அறைக்குள் இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தாா். அவா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, தொடா்புடைய சட்டப் பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 6இன்கீழ் தண்டிக்கப்பட்டாா்.

ஏப்ரல் 18, 2020 அன்று கொவைட்19 பரவலின் உச்சத்தில் இருந்தபோது, அவசர பரோல் வழங்கப்பட்ட பிறகு, யாதவ் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றாா்.

இருப்பினும், பரோல் காலம் முடிந்த பிறகு அவா் திரும்பி வராமல் தலைமறைவாகிவிட்டிருந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் போலீஸாருடன் நடந்த மோதலில் குற்றவாளிகள் இருவா் காயம்

தெற்கு தில்லியின் ஷேக் சராய் பகுதிக்கு அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டஇருவா் காயமடைந்ததாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றபோத... மேலும் பார்க்க