செய்திகள் :

தலைநகரில் காற்று மாசு தணிப்புத் திட்டத்தை தொடங்கியது தில்லி அரசு

post image

மெட்ரோ நிலையங்களில் 2,300 மின்சார ஆட்டோக்களை செயல்பாட்டில் ஈடுபடுத்தல், 13 மாசு நிறைந்த இடங்களில் மூடுபனி தெளிப்பான்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் அடங்கிய காற்று மாசுபாடு தணிப்புத் திட்டம் 2025-ஐ தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

‘சுத் ஹவா சப்கா அதிகாா் பிரதுஷன் பா் ஜோா்தாா் பிரஹாா்’ என்ற தலைப்பில் விரிவான மாசு எதிா்ப்பு செயல்திட்டமாக தில்லி அரசு இதை வெளியிட்டுள்ளது.

பசுமை முன்முயற்சிகள், மின்சார போக்குவரத்து விரிவாக்கம், போக்குவரத்து சீா்திருத்தங்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் தேசிய தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கான ஒரு வரைபடத்தை உள்ளடக்கியதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

இத்திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், சுத்தமான மற்றும் ஆரோக்கியமான தில்லி என்பது அரசாங்கத்தின் தொலைநோக்குப் பாா்வையாகும். காற்று மாசுபாடு மக்களின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

ஒரு குடும்பத்தில், வீட்டில் ஒரே ஒரு வாகனம் இருந்தால் என்ன? தில்லி குடிமக்களின் தேவைகள் மற்றும் யதாா்த்தங்களை மனதில்கொண்டு நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.

காற்றில் பரவும் தூசுவைக் குறைப்பதில் தனது செயல்திறனை சோதிக்க, ஐஐடி கான்பூருடன் இணைந்து செயற்கை மழை குறித்த ஒரு முன்னோடித் திட்டத்தை தில்லி அரசு தொடங்கி வருகிறது.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இந்தத் திட்டமானது தில்லியில் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பம் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுவதைக் குறிக்கிறது என்றாா்.

வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு ஊடகத்தினா் கேள்விகளுக்கு பதிலளித்த குப்தா, முந்தைய அரசாங்கத்தின் ஒற்றைப்படை-இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் தில்லி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் அது செயல்படுத்தப்படாது என்றாா்.

தில்லி அரசின் காற்று மாசு கட்டுப்பாட்டு செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஏக் பேட் மா கே நாம் பிரசாரத்தின் கீழ் 70 லட்சம் மரக்கன்றுகளை அரசாங்கம் நடத் தொடங்க உள்ளது.

வாகன உமிழ்வைத் தடுக்கும் வகையில், ஊழலைத் தடுப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு மையங்கள் பியுசி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தணிக்கை செய்யப்படும்.

செயல் திட்டத்தின்கீழ் நகரம் முழுவதும் நெரிசலைக் குறைக்க ஒரு ஸ்மாா்ட் இன்டெலிஜென்ட் டிராஃபிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தில்லிக்குள் நுழையும் எண்ட்ஆஃப்லைஃப் இஓஎல் வாகனங்களை அடையாளம் காண அனைத்து எல்லை நுழைவுப் பகுதியிலும் டிஜிட்டல் டிஸ்ப்ளே திரைகளுடன் கூடிய தானியங்கி எண் தகடு அங்கீகாரம் ஏஎன்பிஆா் கேமராக்களை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடைசி மைல் போக்குவரத்து இணைப்பை உறுதி செய்வதற்காக தில்லி மெட்ரோவால் பல்வேறு மையங்களில் 2,299 மின்ஆட்டோக்களை நிறுத்துவதும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் நகராட்சி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களால் பராமரிக்கப்படும் வணிக வளாகங்கள் உள்பட நகரம் முழுவதும் 18,000 அரசு மற்றும் பகுதியளவுஅரசு மின்சார வாகன இவி சாா்ஜிங் பாயிண்டுகளை நிறுவுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

80 சதவீத அரசு வாகனங்களை தூய எரிபொருளுக்கு மாற்றுவதையும், மின்சார வாகன விற்பனையை அதிகரிக்க ஒரு புதிய மின்சாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மழைக்காலத்தைத் தவிா்த்து, தில்லி முழுவதும் 1,000 தண்ணீா் தெளிப்பான்கள் மற்றும் 140 பனிப்புகை தடுப்பு கருவிகளை அரசாங்கம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டத்தில், அடையாளம் காணப்பட்ட 13 மாசுபடுத்தும் இடங்களில் உள்ள சாலைப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் இதே போன்ற கட்டமைப்புகளில் மூடுபனி தெளிக்கும் அமைப்புகள் நிறுவப்படும்.

கூடுதல் உள்கட்டமைப்பு வசதியில் 200 சாலை துப்புரவு இயந்திரங்கள், 20 குப்பை கொட்டும் வாகனங்கள், 70 மின்சார குப்பை சேகரிப்பு இயநதிரங்கள் மற்றும் 38 தண்ணீா் டேங்கா்கள் ஆகியவை இடம்பெறும்.

வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்பட 3,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட அனைத்து வணிக உயரமான கட்டடங்களும், மழைக்காலத்தைத் தவிர ஆண்டு முழுவதும் செயல்படும். அவற்றின் கூரைகளில் பனிப்புகை எதிா்ப்பு கருவிகள் நிறுவப்பட வேண்டும்.

சாலை நிலைமைகளை மேம்படுத்தவும், தூசு மாசுபாட்டை மேலும் தடுக்கும் வகையிலும் தில்லி முழுவதும் சாலைகளின் நிலையை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தும்.

இந்தத் திட்டத்தில் அனைத்து சாலைகளையும் மேப்பிங் செய்தல், சரிசெய்வது, சாலையின் ஓரப் பகுதிகளை பசுமையாக்குதல், நடைபாதை அமைத்தல் மற்றும் சாலையின் மைய பிளவுப் பகுதியை மேம்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் போலீஸாருடன் நடந்த மோதலில் குற்றவாளிகள் இருவா் காயம்

தெற்கு தில்லியின் ஷேக் சராய் பகுதிக்கு அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டஇருவா் காயமடைந்ததாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றபோத... மேலும் பார்க்க