செய்திகள் :

இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

post image

தேசிய தலைநகரில் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு காற்று, இடியுடன்கூடிய மிதமான மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, இரு தினங்களாக தில்லியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

செவ்வாய்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 6.9 டிகிரி குறைந்து 33.1 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.3 டிகிரி குறைந்து 24.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. மாலை 5.30 மணி அளவில் ஈரப்பதம் 50 சதவீதமாக பதிவாகியிருந்தது.

புதன்கிழமை நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 டிகிரி செல்சியஸ் மற்றும் 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

மே மாதத்தில் தில்லியில் 186.4 மி.மீ. மழை பெய்தது, இது மே மாதத்தில் பதிவான அதிகபட்ச மழைக்காலமாகும். நிகழாண்டு மே மாதத்தில் பெய்த மழையானது, 2008 ஆம் ஆண்டு இதே மாதத்தில் பெய்த 165 மி.மீ. மழைப்பதிவு என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை தில்லியின் காற்று தரக் குறியீடு 143 புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தெரிவித்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, காற்றின் தரக்குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடையில் இருந்தால் ‘நல்லது’, 51 மற்றும் 100 இடையில் இருந்தால் ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 இடையே இருந்தால் ‘மிதமானது’, 201 மற்றும் 300 இடையே இருந்தால் ‘மோசம்’, 301 மற்றும் 400 இடையே இருந்தால் ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 மற்றும் 500 இடைப்பட்டதாக காற்றின் தரம் இருந்தால் ‘கடுமையானது’ என்று வகைப்படுத்தப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் போலீஸாருடன் நடந்த மோதலில் குற்றவாளிகள் இருவா் காயம்

தெற்கு தில்லியின் ஷேக் சராய் பகுதிக்கு அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டஇருவா் காயமடைந்ததாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றபோத... மேலும் பார்க்க