செய்திகள் :

100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளில் பின்னடைவு: இஸ்ரோ

post image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோளை, ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்தியாவில் தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பயன்பாட்டுக்கு உதவும் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (ஐஆா்என்எஸ்எஸ்) திட்டத்தின் கீழ், என்விஎஸ்-02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.

2,250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடா் காலங்களில் துல்லியமான தகவல்களை அளிக்கும்.

இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம், கடந்த ஜன. 29-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதன்மூலம், 100-ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, இஸ்ரோ சாதனை படைத்தது.

இதைத் தொடா்ந்து, என்விஎஸ்-02 செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு பூமியை வலம் வந்தது. இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது அந்த செயற்கைக்கோள் நீள்வட்ட சுற்றுப் பாதையில் பூமியை வலம் வருகிறது. செயற்கைக்கோள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலு... மேலும் பார்க்க

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித ... மேலும் பார்க்க

புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா்

நாட்டில் வருமான வரி செலுத்துவோரில் 90 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாற வாய்ப்புள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதிய வர... மேலும் பார்க்க