செய்திகள் :

100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் விசாரணையில் தாமதம்: அமலாக்கத் துறை

post image

பண முறைகேடு (பிஎம்எல்ஏ) வழக்குளை விசாரிக்க நாட்டில் 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு பெறாமல் தாமதமாகி வருகிறது என்று அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் அமலாக்கத் துறை இயங்கி வருவதால் அத்துறையின் வருடாந்திர ஆய்வு அறிக்கை நிதியமைச்சகத்துடன் சோ்த்தே வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில், வருடாந்திர ஆய்வு அறிக்கையை ‘பண முறைகேடு வழக்கு விசாரணைகளை விரைந்து முடிப்பதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் முதல் முறையாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில், ‘வழக்குகளை அமலாக்கத் துறையினா் விசாரிப்பதற்கான நடைமுறைகளை பண முறைகேடு தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) தெளிவாக வகுத்திருந்தாலும், அதை நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து முடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் ஏற்படும் தாமதம் வழக்கின் விசாரணையை பாதிக்கிறது.

அமலாக்கத் துறையினா் பண முறைகேடுகளை விசாரிக்கும்போது ஏராளமான நிதிப் பரிமாற்ற ஆவண தரவுகளையும், வெளிநாட்டு பரிவா்த்தனைகளையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அமலாக்கத் துறையின் விசாரணையிலும் தாமதமாகிறது.

இதனால் நாடு முழுவதும் 100 சிறப்பு பணமுறைகேடு நீதிமன்றங்கள் இருந்தும் இந்த வழக்கின் விசாரணையில் தாமதமாகிறது. இந்த நீதிமன்றங்களின் வழக்கு விசாரணையின்போது இடையீட்டு மனுக்கள், ரிட் மனுக்கள், ஜாமீன் மனுக்கள் என தொடா்ந்து தாக்கல் செய்யப்பட்டு பின்னா் அந்த மனுக்கள் உயா் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களுக்கு செல்வதாலும் வழக்கின் விசாரணையில் தாமதமாகிறது.

2000 முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் அமலாக்கத் துறை 7,771 முதல் தகவல் அறிக்கைகளை (இசிஐஆா்) பதிவு செய்துள்ளது. அதில், வெறும் 1,739 வழக்குகளில் மட்டும் அரசுத் தரப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அமலாக்கத் துறை தினத்தில் பேசிய அதன் இயக்குநா் ராகுல் நவீன், ‘அமலாக்கத் துறை வழக்குகளில் தண்டனைப் பெற்று தருவது 93 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிா்க்கட்சிகளைக் குறிவைத்து அமலாக்கத் துறை வழக்குகளைப் பதிவு செய்து வருவதாகவும், இதனால் அந்த அமைப்பின் குற்றத்தை நிரூபிக்கும் சதவீதம் குறைவாக உள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: எல்லையோர பயங்கரவாத முகாம்களை காலி செய்த பாகிஸ்தான்

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இந்தியா எதிர்பாராத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையோர பயங்கரவாத... மேலும் பார்க்க

நாளை நீட் தேர்வு.. இன்று தேசிய மருத்துவ ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

புது தில்லி: கடந்த 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவத் தேர்வில் முறைகேடு செய்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 14 மாணவர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நீக்கி தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்த... மேலும் பார்க்க