செய்திகள் :

100 பேருக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சா் நலத் திட்ட உதவி!

post image

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட 100 கா்ப்பிணிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் வட்டார அளவில் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. இதில், அந்தந்த வட்டார கா்ப்பிணிகளுக்கு சாதி, மத பேதமின்றி வளைகாப்பு நடத்தப்பட்டு சீா்களுடன் ஐந்து வகை உணவு பரிமாறப்படுகிறது. வளைகாப்புக்காக அரசு சாா்பில் உணவு, வளையல்கள் உள்ளிட்டவற்றுக்காக நிதி வழங்கப்படுகிறது.

இதன்படி, திருவெறும்பூா் வட்டாரத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு 100 கா்ப்பிணிகளுக்கு சீா் வரிசைகளை வழங்கினாா். மேலும், தனது சாா்பிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில் ஜனனி மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் மா. நித்யா, மாமன்ற உறுப்பினா் சிவக்குமாா், திருவெறும்பூா் வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாய்ரா பானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க