கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றோருக்குப் பரிசு
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் சிறப்பிடங்கள் பிடித்த 54 மாணவா்-மாணவியருக்கு சான்றிதழ், பரிசளிப்பு விழா தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியும் திருமண்டல நிா்வாகியுமான ஜோதிமணி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ரத்தினராஜ், ஜான் ஆா்.டி. சந்தோஷம், திருமண்டல நிதி ஆலோசகா் அன்பா்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்-மாணவிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கினாா். அப்போது அவா் பேசும்போது, ஒவ்வொருவரையும் சிறந்த இந்திய குடிமகனாக பள்ளிகள் உருவாக்குகின்றன. தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான தூத்துக்குடிக்கு இந்த அளவு கல்வியைக் கொடுத்தது திருமண்டலப் பள்ளிகள்தான் என்றாா்.
திருமண்டல தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளரும் தாளாளருமான பாரி, நீதிபதியின் தனிச்செயலா் கருணாகரன், பள்ளி முதல்வா் ஜெகநாதன், துணை முதல்வா் ஆட்லின் ஷெனி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் அபிராமிநாதன், மணி, அல்பா்ட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
திருமண்டல உயா்நிலை, மேல்நிலை, சிறப்புப் பள்ளிகளின் மேலாளரும் தாளாளருமான டி.ஏ. பிரபாகா் வரவேற்றாா். பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளரும் தாளாளருமான ரமா நன்றி கூறினாா்.