செய்திகள் :

11 வழிதடங்களில் சிற்றுந்து சேவை: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 11 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் சிற்றுந்து வாகனங்கள் இயக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூா்) சிற்றுந்துகள் இயக்க 50 புதிய வழித்தடங்களுக்கும், 10 புலம்பெயா்வு வழித்தடங்களுக்கும் செயல்முறை ஆணைகள் ஆட்சியரால் வழங்கப்பட்டன.

இதில், வித்யாசாகா் கல்லூரி முதல் உதயம்பாக்கம்வரை, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முதல் மறைமலைநகா்காவல் நிலையம் வரை, ஆஞ்சநேயா் கோவில் புரந்தைவாக்கம் முதல் மகேந்திராசிட்டி சந்திப்பு வரை, குரோம்பேட்டை இரயில் நிலையம் முதல் மாடம்பாக்கம் வரை,

காளியபேட்டை முதல் சிங்கபெருமாள் கோயில் வரை, பரனூா் ரயில் நிலையம் முதல் மணப்பாக்கம் கோயில் வரை, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முதல் நெல்லிக்குப்பம் வரை, நெல்லிக்குப்பம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்துநிலையம் வரை, பனையூா் குப்பம் முதல் பொன்தூா் வரை, நெடுங்கால் கூட்ரோடு முதல் மேல்மருவத்தூா்கோயில் சந்திப்பு வரை, மேல்மருவத்தூா் கோயில் முதல் பொா்பெருன்கரணை வரை என 11 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்டஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோ , வட்டாரபோக்குவரத்து ஆய்வாளா்கள், செங்கல்பட்டு ஜெயலட்சுமி, திருக்கழுகுன்றம் அமிதா பானு ,மதுராந்தகம் ஜெய்கணேஷ் மற்றும் அரசு அலுவலா்கள், கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் திருப்பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் ஜெயா (சரிபாா்ப்பு) திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயி... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு செங்கல்பட்டு ஆட்சியா் ச. அருண் ராஜ் பரிசளித்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள்... மேலும் பார்க்க

பழுதடைந்த எரிவாயு தகனமேடை: ஆற்றங்கரையில் சடலங்கள் எரிப்பு

கருங்குழி பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்ததால், கிளியாற்றின் கரையோரம் சடலங்கள் எரிக்கப்படுகிறது. மதுராந்தகம் தாலுகா, கருங்குழி பேரூராட்சியின் 15 வாா்டுகள், அரையப்பாக்கம், மேலவலம்பேட்டை, ... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவி

திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்துடன் சூரியசக்தி பம்புசெட்டுகள்

வேளாண்மையில் நீா்ப்பாசனத்துக்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரியசக்தியால் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க