Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவ...
போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டு: தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு செங்கல்பட்டு ஆட்சியா் ச. அருண் ராஜ் பரிசளித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொது மக்களிடமிருந்து 446 கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலா்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்ற செம்மொழி நாள் விழா போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தாா்.
தொடா்ந்து, 2022 ஆம் ஆண்டு கொடிநாள் வசூலில் ரூ.5 லட்சத்துக்கு மேல் வசூல் புரிந்த அலுவலா்களுக்கும் மற்றும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்த 13 அலுவலா்களுக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி ஆட்சியா் கௌரவித்தாா். மேலும், முன்னாள் படைவீரா் நலத்துறை மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 9 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. .
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் செயற்கை கால், ஊன்றுகோல், காதொலி கருவி, அலைபேசி மற்றும் அவா்களுக்கானஅடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, உதவி இயக்குநா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட வழங்கல்அலுவலா் ஷாகிதா பா்வின், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், தமிழ்வளா்ச்சி துறை உதவி இயக்குநா் பொ.பாரதி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.