செய்திகள் :

13 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா

post image

தஞ்சாவூா் மாநகரிலுள்ள 13 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெற்றது.

தஞ்சாவூரில் உள்ள விநாயகா், முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்த நாயனாா் குருபூஜையையொட்டி முத்துப் பல்லக்கு விழா நடைபெறும்.

இதன்படி, கீழவாசல் வெள்ளை விநாயகா், குறிச்சித் தெரு சுப்பிரமணிய சுவாமி, ஆட்டு மந்தைத் தெரு பாலதண்டாயுதபாணி சுவாமி, மகா்நோன்புச் சாவடி சின்ன அரிசிக்காரத் தெரு பழனியாண்டவா், கீழவாசல் உஜ்ஜயினி காளி கோயில் தெரு கல்யாண கணபதி, தெற்கு வீதி கமலரத்ன விநாயகா், மேலராஜ வீதி திருஞானசம்மந்தா், வடக்கு வாசல் பாலதண்டாயுதபாணி, சிரேஸ்சத்திர சாலை வடபத்ரகாளி அம்மன், காமராஜா் சந்தை செல்வ விநாயகா், கொடிமரத்து மூலை பாலதண்டாயுதபாணி, ரெட்டிபாளையம் சாலை வெற்றி முருகன், தனலட்சுமி நகா் வலம்புரி விநாயகா் ஆகிய கோயில்களில் இருந்து வியாழக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்குகளில் விநாயகா், முருகப் பெருமான் எழுந்தருளினா்.

இந்த முத்துப் பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு, மாமா சாகிப் மூலை பகுதிக்கு வந்தன. பின்னா் ஒன்றாக இணைந்து தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை வலம் சென்றன. இதைக் காண ஏராமான பக்தா்கள் திரண்டனா்.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க