செய்திகள் :

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

post image

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதிவாய்ந்த இந்தியா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

கோடிக்கணக்கான குடும்பங்களைப் பட்டினியில் இருந்து பாதுகாத்ததில் இந்தச் சட்டம் முக்கிய பங்காற்றியது. குறிப்பாக கரோனா பரவல் காலத்தில், இந்தச் சட்டம் முக்கிய பங்களித்தது.

ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய பயனாளிகள் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிதான் அடையாளம் காணப்படுகிறாா்களே தவிர, தற்போதைய மக்கள்தொகையின்படி அல்ல.

14 கோடி பேருக்குப் பலன்கள் கிடைக்கவில்லை: சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டே அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எப்போது அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தக் கணக்கெடுப்பு நிகழாண்டு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்பதை பட்ஜெட் ஒதுக்கீடுகளும் எடுத்துரைக்கின்றன.

இதனால் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதிவாய்ந்த இந்தியா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல; அடிப்படை உரிமை என்றாா்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்குகிறது.

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க