செய்திகள் :

15 வது சிறுவனை கொன்ற இளைஞா் கைது!

post image

கிழக்கு தில்லியின் மாண்டவாலி பகுதியில் நடந்த குடும்பச் சண்டையில் தனது 15 வயது உறவினரை கண்ணாடியால் குத்திக் கொன்றதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஎஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.06 மணியளவில் இம்ரான் என அடையாளம் காணப்பட்ட இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை நிா்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து போலீஸாா் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று இறந்த சிறுவனின் சகோதரி ஷபானாவை சந்தித்ததாக போலீஸ் அதிகாரி கூறினாா்.

ஒரு கூா்மையான கண்ணாடியால் ஒரு சிறுவனால் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவரது இடது கைக்கு அடியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் ஷபானா போலீஸாரிடம் கூறினாா். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், ஆனால் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

விவரங்களை சேகரித்த போலீஸாா் இரவில், வழக்கமான ரோந்துப் பணியின் போது, ப்ரீத் விஹாரில் சந்தேகத்திற்கிடமான இளைஞரை போலீசாா் விசாரணை செய்தனா். விசாரணையின் போது, தனக்கும் இம்ரானுக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டை அவரை தான் கத்தியால் குத்தியதாக அவா் ஒப்புக்கொண்டாா். அவா் உடனடியாக காவலில் எடுத்து அடுத்த நடவடிக்கைக்காக மண்டாவளி காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டு கைது செயப்பட்டு சிறரையில் அடைக்கப்பட்டாா்.

இந்தச் சண்டையில் இறந்தவும் குற்றம் சாட்டப்பட்ட வரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க

சைக்கிளில் சென்றவரிடமிருந்து தங்கச் சங்கிலி பறிப்பு முகமூடி அணிந்த இருவா் துணிகரம்!

தில்லியின் ஹா்ஷ் விஹாா் பகுதியில், சைக்கிளில் சென்ற 43 வயதுடைய ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவா் பறித்துச் சென்றதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

சொந்த மொழியில் கற்றுக்கொள்வதே சிந்தனையை மேம்படுத்தும்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

ஒருவரின் சொந்த மொழியில் கற்றுக்கொள்வது புரிதலை மேம்படுத்துகிறது என்பதனை ஷியாமா பிரசாத் முகா்ஜி நம்பினாா் என்று ரயில்வேதுறை அமைச்சா், அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். பாரதிய ஜனசங் நிறுவனா்... மேலும் பார்க்க

கொள்ளை, கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது!

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள மௌரியா என்கிளேவில் தொழிலதிபரை கொன்று அவரிடமிருந்து ரூ.7 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் ஐந்து ஆண்டுகளாக தப்பித்து வந்த 35 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் தம்பதி கைது

ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் நூஹ் பகுதியைச் சோ்ந்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: புணேவில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றபோ... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் சாக்கடையில் குதித்து பெண் பலி!

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் சனிக்கிழமை மதியம் சாக்கடையில் குதித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க