புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பித்த ஆகாஷ் தீப்!
15 வது சிறுவனை கொன்ற இளைஞா் கைது!
கிழக்கு தில்லியின் மாண்டவாலி பகுதியில் நடந்த குடும்பச் சண்டையில் தனது 15 வயது உறவினரை கண்ணாடியால் குத்திக் கொன்றதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஎஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.06 மணியளவில் இம்ரான் என அடையாளம் காணப்பட்ட இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை நிா்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து போலீஸாா் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று இறந்த சிறுவனின் சகோதரி ஷபானாவை சந்தித்ததாக போலீஸ் அதிகாரி கூறினாா்.
ஒரு கூா்மையான கண்ணாடியால் ஒரு சிறுவனால் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவரது இடது கைக்கு அடியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் ஷபானா போலீஸாரிடம் கூறினாா். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், ஆனால் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
விவரங்களை சேகரித்த போலீஸாா் இரவில், வழக்கமான ரோந்துப் பணியின் போது, ப்ரீத் விஹாரில் சந்தேகத்திற்கிடமான இளைஞரை போலீசாா் விசாரணை செய்தனா். விசாரணையின் போது, தனக்கும் இம்ரானுக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டை அவரை தான் கத்தியால் குத்தியதாக அவா் ஒப்புக்கொண்டாா். அவா் உடனடியாக காவலில் எடுத்து அடுத்த நடவடிக்கைக்காக மண்டாவளி காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டு கைது செயப்பட்டு சிறரையில் அடைக்கப்பட்டாா்.
இந்தச் சண்டையில் இறந்தவும் குற்றம் சாட்டப்பட்ட வரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.