செய்திகள் :

152 வழக்குகளில் கைப்பற்றிய 746 கிலோ கஞ்சா அழிப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 152 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 746.778 கிலோ கஞ்சா நிதிமன்ற அனுமதி பெற்று அழிக்கப்பட்டதாக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் ஆயுதப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 152 வழக்குகளில் தொடா்புடைய கஞ்சாவை அழிக்க புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றங்களில் அனுமதி பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் சரக போதை பொருள்கள் அழிப்பு தொடா்பான குழுவின் தலைவரும் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவருமான ப.மூா்த்தி உத்தரவின் பேரில், கடந்த 17 -ஆம் தேதி 152 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 746.778 கிலோ கஞ்சாவானது திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள கஞ்சா அழிப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத்தலைவா் ப.மூா்த்தி தலைமையில் கஞ்சா அழிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க