செய்திகள் :

16 பெட்டிகளுடன் நமோ பாரத் ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

post image

மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து புஜ் நகருக்கு இடையே நாட்டின் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலில் 12 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நமோ பாரத் விரைவு ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் பிகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜெயநகருக்கு இயக்கப்பட உள்ளது.

இத்தகவலை ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பரப் பிரிவு செயல் இயக்குநர் திலீப் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: முதல்முறையாக 16 பெட்டிக ளைக் கொண்ட நமோ பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது.

பாட்னாவில் இருந்து ஜெயநகருக்கு இயக்கப்பட உள்ள இந்த ரயில் மணிக்கு 110கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன் மூலம் இந்த நகரங்கள் இடையிலான பயண நேரம் பாதியாகக் குறையும்.

வடக்கு பிகாரில் இருந்து பாட்னாவுக்கு வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்காக பயணம் மேற்கொள்ளும் சாமானியர்களுக்கு இந்த ரயில் விரைவான, பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 2000 பயணிகள் பயணிக்க முடியும். ஜெயநகரில் இருந்து பாட்னாவுக்கு இயக்கப்பட உள்ள ரயிலானது மதுபானி, சக்ரி, தர்பங்கா, சமஷ்டிபூர், பரெளனி, மொகாமா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில் நடுத்தர வகுப்பினருக்கு மிகவும் வசதியானதாக இருக்கும். மேலும் உள்ளூர் கைவினைப் பொருள்களையும் வேளாண் பொருள்களையும் சிறிய நகரங்களில் இருந்து பெரிய சந்தைகளுக்கு கொண்டு வர உதவிகரமாக இருக்கும்.

கவச் என்ற பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த ரயிலில் கண்காணிப்பு கேமரா, தீத்தடுப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும். இந்த ரயில் இருபுறமும் என்ஜின்களைக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அவரை குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிர சட்டப... மேலும் பார்க்க

தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!

கேரளத்தில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எட... மேலும் பார்க்க

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க