செய்திகள் :

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாட்மின்டன் பயிற்சியாளர் கைது!

post image

கர்நாடகத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாட்மின்டன் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி இரு ஆண்டுகளாக ஹுலிமாவு பகுதியில் பாட்மின்டன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு பயிற்சியாளராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலாஜி சுரேஷ் (26) அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு கூடுதல் பயிற்சி தருவதாகக் கூறி பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரை வன்கொடுமை செய்த பாலாஜி சுரேஷ், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாலாஜி அந்தச் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த மார்ச் 30 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில் தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, பாலாஜி வற்புறுத்தியதால் பாட்டியின் போனில் இருந்து தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படங்களை போனில் பார்த்தபின் சிறுமியிடம் இதுபற்றி விசாரித்த அவரது பாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு உடனடியாக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பாலாஜி சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், தான் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை பாலாஜி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரின் மொபைல் போனில் வேறு சில பெண்களின் அந்தரங்க புகைப்படங்களும் இருந்ததைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இதையும் படிக்க | மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!

7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!

போபால்: போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!

வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(... மேலும் பார்க்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!

புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.பிகார் ஷ... மேலும் பார்க்க

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க