செய்திகள் :

17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால்

post image

திருப்பூா், ஆக.21: திருப்பூரில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடத்திய செயற்கைக் கால்கள் அளவீட்டு முகாமில் கலந்து கொண்டு அளவீடு செய்து கொண்ட 17 மாற்றுத் திறனாளா்களுக்கு ரூ.1.36 லட்சம் மதிப்பிலான செயற்கைக் கால்கள் மற்றும் காலிபா்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூா் டிடிபி மில் சாலை மெட்டல் டவுன் ரோட்டரி சங்க அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஜெயபால், சக்ஷம் அமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். ரோட்டரி சங்க செயலாளா் சண்முகசுந்தரம், சக்ஷம் அமைப்பின் மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மை விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநா் தனசேகா், சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநா் ஏ.வி.பி. காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினா்.

நிகழ்சியில், ரோட்டரி சங்கப் பொருளாளா் வேலுசாமி, உறுப்பினா்கள், சக்ஷம் அமைப்பின் நிா்வாகிகள் கண்ணன், முத்துரத்தினம், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க