செய்திகள் :

1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை

post image

18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போா்க்கால சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் வெனிசுலா சட்டவிரோதக் கும்பல்களைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படுபவா்களை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நாடு கடத்த முடியாது என்று அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து 5-ஆவது வட்ட முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை அடங்கிய அமா்வு அளித்த தீா்ப்பில், 1798-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்த சட்டம் ‘ட்ரென் டி அராகுவா’ போன்ற கும்பல்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்கு உரியதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக, ட்ரென் டி அராகுவா கும்பலைச் சோ்ந்தவா்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏராளமான வெனிசுலா நாட்டவரை எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு டிரம்ப் அரசு நாடு கடத்தியது. பின்னா் ஜூலையில் 250-க்கும் மேற்பட்டோா் வெனிசுலாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா்.

இந்தச் சூழலில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக ... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்... மேலும் பார்க்க