செய்திகள் :

18 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன; இந்த விமான நிலையங்களில் இருந்து புறப்படும், வந்தடையும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை மே 10-ஆம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்: பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவுதால், பஞ்சாப், ராஜஸ்தானில் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானுடன் பஞ்சாப் 425 கி.மீ., ராஜஸ்தான் 1070 கி.மீ. எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன.

பஞ்சாப் எல்லை கிராமங்களில் அமைதி: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தீவிர பதற்றம் நிலவும் நிலையில், பஞ்சாபில் அமிருதசரஸ், தரண் தாரன் மாவட்ட எல்லை கிராமங்கள் அமைதியாக காணப்பட்டன. மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளை வழக்கம் போல் மேற்கொண்டனா்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் அழிப்பு: பிஎஸ்எஃப்

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகைய... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை நடவடிக்கை தொடா்பான... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ... மேலும் பார்க்க